கோழி தால்சா
recipe Image
 
நெய் சாதம், வெண்ணெய் சாதம் ஆகியவற்றுடன் கோழி தால்சாவை சாப்பிட சுவையாக இருக்கும்.
Cooking Time : 30-45 நிமிடங்கள்

Ingredients:
  • துவரம்பருப்பு - 150 கிராம் அல்லது 2/3 கப்
  • கோழிக்கறி - 350g
  • இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • பட்டை - 1" நீட்டமான துண்டு
  • கிராம்பு – 2
  • வெங்காயம் – 200 கிராம்
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் – 3-4
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • தேங்காய்ப்பால் – 150 மி.லி
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • கொத்தமல்லி இலை நறுக்கியது - 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
  • புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
  • வெதுவெதுப்பான தண்ணீர் - 100 மி.லி
  • உப்பு - சுவைக்கு
  • தண்ணீர் - தேவையான அளவு

மசாலா பொடிகள்

  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
  • சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 1 1/2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு

காய்கறிகள்:

  • உருளைக் கிழங்கு - 2 பெரியது
  • கேரட் – 1 பெரியது
  • கத்திரிக்காய் - 6-8
  • முட்டைக்கோஸ் - 50 கிராம் (விரும்பினால்)
  • சொரக்காய் - 50 கிராம் or 1/4 நடுத்தர அளவு (விரும்பினால்)
  • வாழைக்காய் - 1 small (விரும்பினால்)
  • மாங்காய் - 2 பெரிய துண்டு (விரும்பினால்)
Method:
  1. பருப்பை நன்றாக கழுவி வடிகட்டவும். கோழித் துண்டுகளை சுத்தம் செய்து வடிகட்டவும்.
  2. வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கின் தோலை உரித்து 4-5 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  4. கேரட்டையும் தோல் சீவி 2 செ.மீ. துண்டுகளாக வெட்டவும்.
  5. மற்ற காய்கறிகளையும் 1” நீளத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  6. புளியை சுத்தம் செய்து சில நிமிடங்களுக்கு சூடான தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக பிழிந்து, புளிச்சாறை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

சமைக்கும் விதம்:

  1. அடுப்பில் பிரஷர் குக்கர் கடாயை வைத்து சூடாக்கவும்.
  2. 300 மி.லி தண்ணீருடன் பருப்பையும், சிறிது மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.
  3. கடாயை மூடி 2-3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். வெந்த பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.
  4. 3-4 லி பிரஷர் குக்கர் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன், கருவேப்பிலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
  6. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை கிளறவும்.
  7. பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  8. அனைத்து மசாலா பொடிகளையும் மற்றும் கோழித் துண்டுகளையும் சேர்த்து சுமார் 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  9. நறுக்கியெடுத்த தக்காளி, உப்பு மற்றும் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.
  10. கடாயில் சுமார் 1 கப் தண்ணீர் ஊற்றி, சட்டியை மூடி
  11. விசில் வந்தவுடன், அடுப்பை குறைத்து 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
  12. சமைத்த பருப்பை கோழிக்கறி மற்றும் காய்கறி வேக வைத்த சட்டியில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  13. புளிச் சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்றாக கலக்கி கொதிக்க வைக்கவும்.
  14. கடைசியில் கருவேப்பிலை / கொத்தமல்லி இலைகள் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
Notes:
குழம்பில் சொரக்காய் சேர்ப்பதாக இருந்தால், தண்ணீரின் அளவை சிறிது குறைக்கவும். மாங்காய் சேர்ப்பதாக இருந்தால், புளியின் அளவை சிறிது குறைக்கவும். சமையல் நேரம் தொடர்பான <a href="/cookingwarning#chicken">எச்சரிக்கை</a>யை தயவு செய்து பார்க்கவும்.