கயிர் கட்டி கோலா
recipe Image
 
கயிர் கட்டி கோலா தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் ஒரு சிறப்பான பண்டம். பழங்காலத்தில், கயிர் அல்லது வாழை நாரை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரித்து செய்யும் ருசியான உணவாகும். இப்பொழுது ப்ரெட் தூள் கிடைப்பதால், அதை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரிக்கலாம்.
Preparation Time : 20-30 நிமிடங்கள்

Cooking Time : 30-45 நிமிடங்கள்

Ingredients:
  • 400 கிராம் ஆட்டு இறைச்சி கைமா (கொத்து இறைச்சி )
  • 1 வெங்காயம் நடுத்தர அளவு
  • இஞ்சி 1" நீட்டமான 3/4" அகலமான துண்டு
  • 4-5 பல் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலை
  • 1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு
  • 2 முட்டை
  • 125 கிராம் ப்ரெட் துண்டுகள்
  • சுவைக்கேற்ப உப்பு
  • வறுக்க 250 மில்லி எண்ணெய்

அரைக்கத் தேவையான பொருட்கள்:

  • 1 இஞ்ச் இலவங்கப் பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 தேக்கரண்டி கசகசா (விரும்பினால்)
  • 3 மேசைக்கரண்டி துருவிய தேங்காய்
  • 5 தேக்கரண்டி பொட்டு கடலை

மசாலாப் பொடிகள்:

  • 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
Method:
  1. வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். அரைத்த இறைச்சியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பெரிய நான்-ஸ்டிக் கடாயை அடுப்பில் வைக்கவும்.
  3. இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, பொட்டு கடலை மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் வரை நன்றாக வறுக்கவும் . சூடு ஆறிய பின்பு, தண்ணீர் சேர்க்கமால் அரைத்துக் கொள்ளவும்.
  4. மீண்டும் கடாயை அடுப்பில் வைக்கவும்.
  5. கொத்து இறைச்சி மற்றும் மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்றாக வறுக்கவும். இறைச்சி நன்றாக ஆறிய பிறகு, எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும்.
  6. அரைத்த இறைச்சி, உப்பு, அரைத்த இலவங்கம் மற்றும் அனைத்து கலவை, பொடிசாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  7. இவை அனைத்தையும் 4-5 செ.மீ அளவு உருண்டையாகப் பிடித்துக் கொள்ளவும்.
  8. முட்டைகளை நன்றாக அடித்து, தனியாக வைத்துக் கொள்ளவும். ப்ரெட் துண்டுகளை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  9. வறுக்கும் சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து, எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  10. இறைச்சி உருண்டைகளை, அடித்த முட்டையில் நனைத்து, அதன் பிறகு ப்ரெட் துண்டுகளில் போட்டு எடுக்கவும்.
  11. இவை நன்றாக வேகும் வரை எண்ணெயில், நான்கு நான்காக போட்டுப் பொரிக்கவும்.
Notes:
இதை விருந்துகளில் பசியைத் தூண்டும் உணவாகாப் பயன்படுத்தலாம். இதை இரவு நேர அல்லது மதிய நேர சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம். ப்ரெட்துண்டுகள் கிடைக்கவில்லை என்றால் ப்ரெட்டை வாங்கி அரைத்துக் கொள்ளவும்.