சாம்பார்
recipe Image
 
பொதுவாக தமிழ்நாட்டில் சாம்பார் செய்யாத வீடே இருக்க முடியாது என்று சொல்லலாம். இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் சாம்பாரின் சுவை வேறு பட வாய்ப்புள்ளது.
Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Serves : 3-4

Ingredients:
  • துவரம் பருப்பு – 1௦௦ கிராம் அல்லது 1/2 கப் ( 25௦ மில்லி கப்)
  • வெங்காயம் – 1 சிறியது (விரும்பினால்)
  • தக்காளி – 1 சிறியது
  • முருங்கைக்காய் – 1
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • சாம்பார் தூள் – 2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • வறுத்த மல்லி தூள் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • நெய் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  • புளி – 1/2 நெல்லிக்காய் அளவு
  • வெந்நீர் – 15௦ மில்லி
  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • காய்ந்த மிளகாய் – 1
  • கருவேப்பிலை – 6-7
  • பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
  • நறுக்கிய கொத்தமல்லி இலை– 2-3 தேக்கரண்டி (விரும்பினால்)
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப
Method:
  1. பருப்பை அலசி வடிக்கவும்.
  2. அடுப்பில் பிரஷர் குக்கரை சூடாக்கவும்.
  3. பருப்பு, 2௦௦ மில்லி தண்ணீர், பூண்டு மற்றும் பாதி மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  4. பாத்திரத்தை மூடி பிரஷரில் சமைக்கவும். 2-3 விசிலுக்குப் பின் அடுப்பை அணைத்து பிரஷர் நீங்கியவுடன் திறக்கவும்.
  5. புளியைக் கழுவி வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து, புளிச் சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
  6. முருங்கைக்காயை 5-6 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்; வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக்கொள்ளவும்.
  7. சாம்பார் சமைப்பதற்கான வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி, 200 ml தண்ணீர், உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  8. நறுக்கிவைத்த வெங்காயம், தக்காளி மற்றும் காய்களை அதனுடன் சேர்க்கவும்.
  9. 10-12 நிமிடங்கள் அல்லது காய் வேகும் வரை வாணலியை மூடி வைத்து சமைக்கவும். காய் நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
  10. வேகவைத்த பருப்பை, வேகவைத்த காய்களுடன் சேர்க்கவும்.
  11. சிறிய கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.
  12. கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  13. வறுத்த மல்லி தூள், சாம்பார்த் தூள் மற்றும் புளிச்சாறை சேர்த்து கொதிக்க வைக்கவும். சாம்பார்த் தூள் மற்றும் வறுத்த மல்லி தூள் சாம்பாருக்கு நல்ல சுவையைக் கொடுக்கும். எனவே, இவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டையுமே சேர்த்தால் சுவையாக இருக்கும்.
  14. தாளித்த கலவையை பருப்பு மற்றும் காய் உள்ள வாணலியில் ஊற்றி, நெய் , நறுக்கிவைத்த கொத்தமல்லி இலை, தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பை சேர்த்துக் கிளறவும்.
  15. வாணலியை மூடி சுமார் 4-5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  16. சாம்பார் தயார்.
Notes:
இது சாதம் மற்றும் <a href="/recipes/Chicken-shaerwa”>கோழி பிரட்டல்</a>, <a href="/recipes/Prawns-Green-pepper-masala">இறால் மசாலா</a>, <a href="/recipes/Spicy-fish-fry">மீன் வறுவல்</a>, <a href="/recipes/Lamb-Mutton-Masala">மட்டன் மசாலா</a> அல்லது <a href="/recipes/Pepper-Jeera-Mutton-curry"> மிளகு-ஜீரக மட்டன் மசாலா </a> ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. முருங்கைக்காய்க்கு பதிலாக முள்ளங்கி, கத்திரிக்காய், சிறிய வெங்காயம், வெண்டிக்காய், பீன்ஸ், சொரக்காய் அல்லது சௌசௌ சேர்க்கலாம். இட்லி/தோசை சாம்பாருக்கு, தயவு செய்து<a href="/recipes/idli-dosai-sambar"> இங்கு</a> கிளிக் செய்யவும்.