கோழி தால்சா

நெய் சாதம், வெண்ணெய் சாதம் ஆகியவற்றுடன் கோழி தால்சாவை சாப்பிட சுவையாக இருக்கும்.

Posted by ShareRecipes Staff
12/03/2014

Click to rate this post!
[Total: 1 Average: 4]
Please rate it

சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்

செய்முறை புகைப்படத்தைப் பதிவேற்றுக


பிரதான மூலப்பொருள் : கோழி இறைச்சி பருப்பு / கடலை

தேவையான பொருட்கள் :

 

  • துவரம்பருப்பு - 150 கிராம் அல்லது 2/3 கப்
  • கோழிக்கறி - 350g
  • இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • பட்டை - 1" நீட்டமான துண்டு
  • கிராம்பு – 2
  • வெங்காயம் – 200 கிராம்
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் – 3-4
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • தேங்காய்ப்பால் – 150 மி.லி
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • கொத்தமல்லி இலை நறுக்கியது - 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
  • புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
  • வெதுவெதுப்பான தண்ணீர் - 100 மி.லி
  • உப்பு - சுவைக்கு
  • தண்ணீர் - தேவையான அளவு

மசாலா பொடிகள்

  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
  • சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 1 1/2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு

காய்கறிகள்:

  • உருளைக் கிழங்கு - 2 பெரியது
  • கேரட் – 1 பெரியது
  • கத்திரிக்காய் - 6-8
  • முட்டைக்கோஸ் - 50 கிராம் (விரும்பினால்)
  • சொரக்காய் - 50 கிராம் or 1/4 நடுத்தர அளவு (விரும்பினால்)
  • வாழைக்காய் - 1 small (விரும்பினால்)
  • மாங்காய் - 2 பெரிய துண்டு (விரும்பினால்)

முறை :
  1. பருப்பை நன்றாக கழுவி வடிகட்டவும். கோழித் துண்டுகளை சுத்தம் செய்து வடிகட்டவும்.
  2. வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கின் தோலை உரித்து 4-5 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  4. கேரட்டையும் தோல் சீவி 2 செ.மீ. துண்டுகளாக வெட்டவும்.
  5. மற்ற காய்கறிகளையும் 1” நீளத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  6. புளியை சுத்தம் செய்து சில நிமிடங்களுக்கு சூடான தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக பிழிந்து, புளிச்சாறை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

சமைக்கும் விதம்:

  1. அடுப்பில் பிரஷர் குக்கர் கடாயை வைத்து சூடாக்கவும்.
  2. 300 மி.லி தண்ணீருடன் பருப்பையும், சிறிது மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.
  3. கடாயை மூடி 2-3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். வெந்த பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.
  4. 3-4 லி பிரஷர் குக்கர் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன், கருவேப்பிலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
  6. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை கிளறவும்.
  7. பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  8. அனைத்து மசாலா பொடிகளையும் மற்றும் கோழித் துண்டுகளையும் சேர்த்து சுமார் 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  9. நறுக்கியெடுத்த தக்காளி, உப்பு மற்றும் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.
  10. கடாயில் சுமார் 1 கப் தண்ணீர் ஊற்றி, சட்டியை மூடி
  11. விசில் வந்தவுடன், அடுப்பை குறைத்து 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
  12. சமைத்த பருப்பை கோழிக்கறி மற்றும் காய்கறி வேக வைத்த சட்டியில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  13. புளிச் சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்றாக கலக்கி கொதிக்க வைக்கவும்.
  14. கடைசியில் கருவேப்பிலை / கொத்தமல்லி இலைகள் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

குறிப்புகள் : குழம்பில் சொரக்காய் சேர்ப்பதாக இருந்தால், தண்ணீரின் அளவை சிறிது குறைக்கவும். மாங்காய் சேர்ப்பதாக இருந்தால், புளியின் அளவை சிறிது குறைக்கவும். சமையல் நேரம் தொடர்பான எச்சரிக்கையை தயவு செய்து பார்க்கவும்.


 

இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.




 

அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (178)

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close